ENGINEERING ARTS & SCIENCE PHARMACY NURSING
Home About

News & Events

12/Dec/2019

பெரி தமிழ்ப்பேரவை





பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை சார்பகப் பெரி தமிழ்ப்பேரவை தொடக்க விழா நிகழ்வு 12.12.2019 அன்று சிறப்பு விருந்தினரால் குத்து விளக்கு ஏற்றி வைத்துச் சீரும் சிறப்புமாகத் தொடங்கப்பெற்றது.





இந்நிகழ்விற்குத் தலைமை வகித்தும் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தும் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ. குணசேகரன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.





இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகச் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினரும், தாகூர் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வருமான முனைவர் ஆர். சாந்தி அம்மையார் அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு தமிழ் மொழியின் பழமை குறித்தும், சிறப்புத் தன்மையை விளக்கியும் உரை நிகழ்த்தினார்.





இவ்விழாவின் தொடக்கமாக தமிழ்த்துறையின் பேராசிரியர் முதுமுனைவர் அ. குபேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மனைவியர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.





இவ்விழாவின் இறுதியாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் தி. சீதாராமன் அவர்கள் இவ்விழாவிற்கு வருகை புரிந்து அத்துணை அன்பர்களுக்கும் நன்றி கூறினார்.





இவ்விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக வணிகவியல் முதலாமாண்டு மாணவிகள் ரேவதி, தாமரைச்செல்வி ஆகியோர் சிறப்பான முறையில் நிகழ்ச்சினைத் தொகுத்து வழங்கினர்.





இவ்விழாவில் தமிழ் மொழியின் சிறப்பினையும், பழமையினையும் அறிந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்த மாணவச் செல்வங்கள்.

© PERI 2019 - All rights reserved.